பா.ம.கவினர் மீது தலித்கள் தாக்குதல்: வேட்பாளர் காயம்
விழுப்புரம்:
தங்கள் கிராமத்துக்குள் நுழைந்த திண்டிவனம் தொகுதி பாமக வேட்பாளரும் டாக்டர் ராமதாஸின் உறவினருமானதன்ராஜ் உள்ளிட்ட அக் கட்சியினரை தலித் சமுதாயத்தினர் தாக்கினர். இதில் வேட்பாளர் தன்ராஜ்காயமடைந்தார்.
திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட கிள்ளியனூர் சுற்று வட்டாரத்தில் தன்ராஜ் உள்ளிட்ட பாமகவினர் தேர்தல் பிரசாரம்மேற்கொண்டிருந்தனர். அப்போது நல்லவூர் என்ற தலித் மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் அவர்கள் செல்லமுயன்றனர்.
ஆனால் வன்னியர்கள் தங்களது கிராமத்திற்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று கூறி கிராம மக்கள்பாமகவினரை தடுத்தனர். அதையும் மீறி பாமகவினரின் வாகனங்கள் கிராமத்திற்குள் நுழையவே, கிராம மக்கள்ஆத்திரமடைந்தனர்.
வாகனங்கள் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் தன்ராஜ் அமர்ந்திருந்த கார் கண்ணாடி உடைந்து அவர்லேசான காயமடைந்தார். தலித் மக்களின் ஆவேச தாக்குதலையடுத்து பாமகவினர் உடனடியாக அங்கிருந்துதிரும்பிவிட்டனர்.
இதுதொடர்பாக கிள்ளியனூர் காவல் நிலையத்தில் பாமக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications