பா.ஜ.க. என்ன செய்யப் போகிறது: ப.சிதம்பரம் கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா மறு ஆய்வுக் குழு விடுதலை செய்துள்ளது பாராட்டுக்குரியதுஎன்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், வைகோ மீதான பொடா வழக்கில் பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று பொடாமறு ஆய்வுக் குழு கூறியுள்ளது. இதுபாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது.
இந்த தீர்ப்பையடுத்து, பாஜக என்ன செய்யப் போகிறது என்பதை அக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.
வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுமாற அதிமுகவிடம் பா.ஜ.க. வேண்டுகோள் விடுக்குமா? அந்தவேண்டுகோளைஅதிமுக ஏற்குமா? அப்படி ஏற்காவிட்டால் அதிமுகவின் முடிவை பாஜக ஏற்றுக் கொள்ளுமா?என்பதை பாஜக விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications