திமுகவை எதிர்க்கவில்லை: கருணாநிதியிடம் ரஜினி உறுதி- ஸ்டாலின்
உதகமண்டலம்:
ரஜினிகாந்த் திமுகவுக்கு எதிராக செயல்பட மாட்டார் என அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்கூறியுள்ளார்.
ஊட்டியில் (உதகமண்டலம்) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சில இடங்களில் ரஜினிகாந்த் ரசிகர்கள்எடுத்துள்ள முடிவு ரஜினியைக் கட்டுப்படுத்தாது. அவர் திமுகவை எதிர்த்து செயல்பட மாட்டார். இது தொடர்பாககருணாநிதியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
ரஜினி ரசிகர்களின் பாமக எதிர்ப்பால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. 40தொகுதிகளிலும் நாங்கள் வெல்வோம் என்றார்.
பின்னர் குன்னூர், அருவங்காடு, எல்லனள்ளி, வேலி வியூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீலகிரி காங்கிரஸ்வேட்பாளர் பிரபுவுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
ரஜினியால் பிரச்சனையில்லை: நெப்போலியன்
இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், திமுக எம்.எல்.ஏவுமான நெப்போலியன்,
தனது ஆதரவு யாருக்கு என்பதை ரஜினிகாந்த் வாய் திறந்து சொல்லவில்லை. அவரது ரசிகர்கள்தான் பேசிவருகிறார்கள். எனவே ரஜினி ரசிகர்களின் பாமக எதிர்ப்பால் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது.
ரஜினி திமுக கூட்டணிக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்று கருணாநிதி கூறியுள்ளார். அவரது வார்த்தைகளையேநாங்கள் நம்புகிறோம். 35 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று முன்பு கணித்திருந்தோம். போகிற போக்கையும்,மக்கள் மன மாற்றங்களையும் பார்த்தால் கூடவே சில தொகுதிகள் கிடைக்கும் என்று ஊகிக்கிறோம் என்றார்நெப்போலியன்.
ரஜினியால் பிரச்சனையில்லை: நெப்போலியன்
இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், திமுக எம்.எல்.ஏவுமான நெப்போலியன்,
தனது ஆதரவு யாருக்கு என்பதை ரஜினிகாந்த் வாய் திறந்து சொல்லவில்லை. அவரது ரசிகர்கள்தான் பேசிவருகிறார்கள். எனவே ரஜினி ரசிகர்களின் பாமக எதிர்ப்பால் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது.
ரஜினி திமுக கூட்டணிக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்று கருணாநிதி கூறியுள்ளார். அவரது வார்த்தைகளையேநாங்கள் நம்புகிறோம். 35 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று முன்பு கணித்திருந்தோம். போகிற போக்கையும்,மக்கள் மன மாற்றங்களையும் பார்த்தால் கூடவே சில தொகுதிகள் கிடைக்கும் என்று ஊகிக்கிறோம் என்றார்நெப்போலியன்.
ராதிகாவிடம் ஓட்டு கேட்ட பாலு:
நடிகர் சரத்குமார்- ராதிகா ஆகியோரின் வீட்டுக்குச் சென்று தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர்டி.ஆர்.பாலு ஒட்டுக் கேட்டார்.
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சென்னைகொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டுக்குச் சென்றார்.அவரை சரத்குமாரும், ராதிகாவும் வரவேற்றனர்.பின்னர் தனக்கு உதயசூயன் சின்னத்தில் வாக்களிக்குமாறு டி.ஆர்.பாலு சிரித்தவாறே கேட்டார்.
பின்னர் பிரசாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள் என்று சரத்குமாரிடம் டி.ஆர்.பாலு விசாரித்தார். விரைவில்தொடங்கவுள்ளதாக சரத்குமார் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications