ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் மாபெரும் விபத்து தவிர்ப்பு
சென்னை:
சென்னை ஆவடி அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் எதிரெதிரே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சமயோசிதமாக ரயில் டிரைவர்கள் செயல்பட்டதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
இன்று காலை சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு ஒரு ரயில் கிளம்பிச் சென்றது. ஆவடி ரயில் நிலையத்தை அந்த ரயில்அடைந்து கொண்டிருந்தபோது அரக்கோணத்திலிருந்து சென்னை வந்த மின்சார ரயிலும் அதே தண்டவாளத்தில் எதிர் திசையில்வந்தது.
இதைப் பார்த்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பீதியில் அலறினர். உடனடியாக ரயில் டிரைவர்கள் உஷாரடைந்து அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தி 100 மீட்டர் வித்தியாசத்தில் இரு ரயில்களையும் நிறுத்தினர்.இதனால் பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது.
சிக்னல் கருவி சரியாக செயல்படாத காரணத்தால்தான் இந்தச் சம்பவம் நேர்ந்தாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்தவுடன்மண்டல ரயில்வே மேலாளர் ரங்கராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இது குறித்துவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் காரணமாக ஆவடி ரயில் நிலையம் வழியாகச் செல்லும் எல்லா ரயில்களும் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications