நெல்லை காங். வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன்: எதிர்த்து வசந்த் குமார் போட்டி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெயரை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதையடுத்து சீட்கிடைக்காமல் ஏமாந்த வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்த்குமார் சுயேச்சையாகப்போட்டியிடப் போவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதலில் மயிலாடுதுறை, நீலகிரி ஆகியதொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன் பின்னர் மீதமுள்ள தொகுதிகளின் வேட்பாளர்களைதேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவியது.

பல்வேறு கலாட்டாக்களுக்குப் பிறகு 7 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டன. நெல்லை மட்டும்அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்தத் தொகுதியை தனுஷ்கோடி ஆதித்தனுக்குத் தர வேண்டும் என வாசன் கோரி வந்தார். ஆனால், தனத பணபலத்தால் டெல்லி தலைவர்களை வளைத்த வசந்த்குமார் தொகுதியைக் கைப்பற்ற முயன்றார்.

இறுதியில் ஆதித்தனுக்கே வெற்றி கிடைத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன்வாசனின் தீவிர ஆதரவாளர்.

முன்னதாக தனுஷ்கோடி ஆதித்தனின் ஆதரவாளர்கள் திருநெல்வேலியில் ஆலோசனைக் கூட்டத்தைமேற்கொண்டனர். அந்த இடத்திற்கு வசந்தகுமாரின் (இவரும் நெல்லையில் சீட் கேட்டிருந்தார்) ஆதரவாளர்கள்வந்து வசந்தகுமாருக்கு ஆதரவாகவும், ஆதித்தனுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

இதனால் ஆதித்தனின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து, வசந்தகுமாரின் ஆதரவாளர்களை அடித்து உதைத்து,அங்கிருந்து விரட்டினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந் நிலையில் சீட் கிடைக்காக வசந்த் குமார் தனித்து சுயேச்சையாகப் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள்கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+