காங்கிரஸ் கோஷ்டி பூசலில் தவிக்கும் எல். கணேசன்
திருச்சி:
திருச்சி மாவட்ட காங்கிரஸாரின் கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொண்டு, திருச்சி மதிமுக வேட்பாளர் எல்.கணேசன்அவஸ்தைப்படுகிறார்.
பிற இடங்களைப் போலவே திருச்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் சில கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் அடைக்கலராஜ் தலைமையில் ஒரு கோஷ்டியும், மேயர் சாருபாலாதொண்டமான், முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் ஆகியோரின் தலைமையில் ஒரு கோஷ்டியும் உள்ளன.
இந்த இரண்டு கோஷ்டியினரும் இழுக்கும் இழுப்புக்கு ஒத்துப் போக வேண்டிய கட்டாயத்தில் எல்.கணேசன்உள்ளார். கடந்த வாரம் ஜெரோம் அடைக்கலராஜ் தலைமையில் நடந்த தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில்எல்.கணேசன் கலந்து கொண்டார்.
இந் நிலையில் சாருபாலா தொண்டமான் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள கணேசனுக்குஅழைப்பு வந்தது. எந்தக் கோஷ்டியையும் பகைத்துக் கொள்ள விரும்பாத கணேசன் இதிலும் கலந்து கொண்டார்.
ஏற்கனவே வயோதிகம் காரணமாக பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட முடியாமல் தவித்து வரும் கணேசனை,காங்கிரஸ் கோஷ்டியினர் வேறு அலைக்கழிப்பதால் திருச்சி மாவட்ட மதிமுகவினர் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications