ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் விடுக்கும் சவால்
மயிலாடுதுறை:
காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டால்தான் ஒரே மேடையில் பேசுவேன் என்று பிரதமர் வாஜ்பாய்க்குநிபந்தனை விதிக்க முதல்வர் ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சவால்விடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாஜ்பாயும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பேசப்போவதாக கூறுகிறார்கள். ஜெயலலிதா அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
காவிரி நீரை தமிழகத்திற்குக் கட்டாயம் கொண்டு வருவேன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்றுவாஜ்பாயிடமிருந்து உறுதி மொழி வாங்கித் தர முடியுமா உங்களால்?
காவிரி நீர் வந்தால்தான் உங்களுடன் ஒரே மேடையில் பேசுவேன் என்று வாஜ்பாயிடம் நிபந்தனை விதிக்கஜெயலலிதா தயாரா? காவிரிப் பிரச்சினை சிக்கலடைந்ததற்கு ஜெயலலிதாதான் முழுப் பொறுப்பும் ஏற்கவேண்டும்.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவு நமக்குக் கிடைத்து 13 ஆண்டுகளாகி விட்டது. இந்த 13ஆண்டுகளில் 8 ஆண்டுகாலம் ஜெயலலிதா ஆட்சி புரிந்துள்ளார். ஆனால் காவிரியிலிருந்து நீர் கொண்டுவருவதற்குரிய ஒரு நடவடிக்கையிலும் அவர் உருப்படியாக ஈடுபடவில்லை.
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திலும், பின்னர் வாஜ்பாய் ஆட்சியிலும், ஜெயலலிதாவின் ஆதரவு மத்திய அரசுக்குமிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதைப் பயன்படுத்தி, மத்திய அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்துகாவிரிப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் ஜெயலலிதா என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications