நடிகையின் தங்கை வீட்டில் புளு பிலிம் சூட்டிங்:5 பேர் கைது
சென்னை:
பிரபல நடிகை ஒருவரின் தங்கையின் வீட்டில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்தகும்பலை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பர்மா பஜார், ரத்தன் பஜார் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது ஆபாச சி.டிக்களுடன்விருகம்பாக்கம் கிருஷ்ணா நகரை சேர்ந்த முத்து (வயது 24), சாலிக்கிராமம் குமரன் காலனியை சேர்ந்த ராஜு (32)ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது, வளசரவாக்கம் பகுதியில் ஒரு பங்களாவில் ஆபாசப் படம் தயாரிக்கும்தகவலைக் கூறினர். அவர்கள் சொன்ன முகவரியான வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் வேலன்நகர் கோபால்அவென்யூவில் உள்ள ஒரு பங்காளாவுக்கு போலீஸார் சென்றனர்.
போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்திய போது நிர்வாண சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த 5 ஆண்களும்,பிளஸ்-1 படிக்கும் மாணவியும், 4 டிவி துணை நடிகைகளும் பிடிபட்டனர்.
நேற்று நடந்தது இன்று என்ற தலைப்பில் டி.வி. தொடர் தயாரிப்பதாகக் கூறி இந்த 5 பெண்களை வரவழைத்து,அவர்களுக்கு வாங்கிக் கொடுத்த பிரியாணி மற்றும் பீரில் போதை மருந்து கலந்துளனர். அவர்கள் மயக்கத்தில்இருந்தபோது நிர்வாண படம் எடுத்துள்ளனர்.
பின்பு இதை காட்டி மிரட்டி 2 பெண்களை வைத்து முழு ஆபாச படம் எடுத்து உள்ளனர். பிளஸ்-1 மாணவியும்இன்னும் 2 பெண்களும் இதில் நடிக்க மறுத்ததால் தப்பிவிட்டனர்.
இதையடுத்து ஈஞ்சம்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த காமிராமேன் கணேஷ்ராஜ் (36),சாலிகிராமம். ஆற்காடு ரோட்டைச் சேர்ந்த நிர்வாண சினிமா நடிகர் சுரேஷ் (28), ஆழ்வார் திருநகர் இந்திராநகரைச் சேர்ந்த முருகேசன் (30), விருகம்பாக்கம் பச்சையம்மன் நகரைச் சேர்ந்த பெரியசாமி (36), வளசரவாக்கம்வேலவன் நகரைச் சேர்ந்த வாட்ச்மேன் ராமகிருஷ்ணன் (38), ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிமிடருந்து வீடியோ காமிரா, செல்போன், நிர்வாண பட கேசட்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டன.
இதில் முக்கிய பங்கு வகித்த டைரக்டர் ஐசக், அவரது கூட்டாளி சிவா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.பிடிபட்ட நடிகைகள் மற்றும் பிளஸ்-1 மாணவி ஆகியோரின் எதிர்காலம் கருதி போலீஸார் அவர்களை கைதுசெய்யவில்லை.
இந்த 5 பேரில் மயிலாப்பூரை சேர்ந்த ஒரு டி.வி. நடிகை மட்டும் திருமணம் ஆனவர். மீதி 4 பேரும் 18 முதல் 21வயதுக்கு உட்பட்டவர்கள். நிர்வாண படம் எடுக்கப்பட்ட பங்களாவின் உரிமையாளர் பிரபல நடிகையின்தங்கையாவர். இவர் டி.வி. நடிகையாவார். இவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications