சென்னையில் அவசரமாய் தரையிறங்கிய மலேசிய விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
என்ஜின் கோளாறு காரணமாக மலேசிய விமானம் சென்னையில் இன்று காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மலேசியாவிலிருந்து அபுதாபிக்கு 120 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. நடுவானில்பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜின்களில் ஒன்று பழுதடைந்தது.
இதனையடுத்து விமானம் அவசர அவசரமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.தரையிறங்கும்போது தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அசம்பாவிதம் ஏதும் நேராமல் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் 120 பேரும்சென்னையில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் விமானம் அபுதாபிக்கு கிளம்பும் என்று விமான நிலைய அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications