இசை நிகழ்ச்சிகளுடன் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் !
சென்னை:
ஆங்கிலப் புத்தாண்டுக்கு நிகராக, தமிழ்ப் புத்தாண்டையும் கோலாகலமாகக் கொண்டாடினர் திரையுலகினர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி இந்தியாவே கலங்கிப் போகும் வகையில் ஆங்காங்கு ஆட்டம், பாட்டம்கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் தமிழர்களின் புத்தாண்டு தினம் மட்டும் படு வித்தியாசமாக இருக்கும்.
அமைதியான முறையில் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வரும் தமிழர்கள் மத்தியில் புத்தாண்டு உற்சாகத்தைக்கொண்டு வரும் வகையில், சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மண்-ஸ்ருதி இசைக் குழுவினர், திரையுலகினரின்ஒத்துழைப்போடு, சென்னை சாந்தோம் திறந்த வெளி மைதானத்தில் தமிழ்ப் புத்தாண்டு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தனர்.
மன்மத ராசா, உம்மா உம்மம்மா புகழ் மாலதி லக்ஷ்மன், பரவை முனியம்மா, திப்பு, மால்குடி சுபா, ஸ்ரீலேகாபார்த்தசாரதி, நடிகர் பாண்டியராஜன் என திரையுலகின் பல தரப்பினரும் இதில் கலந்து கொண்டு கலக்கினர்.
மாலதி லக்ஷ்மணுக்கும், பரவை முனியம்மாவுக்கும்தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. அவர்கள்பாடியபோது கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் எழுந்து ஆடினார்கள்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக சென்ற இந்த நிகழ்ச்சியை சின்னத் திரை நடிகை அர்ச்சனா தொகுத்துவழங்கினார்.












Click it and Unblock the Notifications