காவிரி பிரச்சினையை தீர்ப்போம்; கூறுகிறது பாஜக!
சென்னை:
கர்நாடகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம் என்றுதமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சிக்கு வந்தஉடனேயே காவிரிப் பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் வேட்பாளர்களை முழுமையாக அறிவிக்கமுடியாமல் அக்கட்சித் தலைமை திணறுகிறது. அத்தோடு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து சேலம்,ராசிபுரம், திருநெல்வேலி என காங்கிரஸார் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்துகின்றனர்.
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாககாங்கிரஸாரே தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ள அக்கட்சியின் கோஷ்டிப் பூசலின் உக்கிரத்தையேகாட்டுகிறது என்றார் குமாரவேலு.












Click it and Unblock the Notifications