விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க 45 நாள்கள் தடை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
தமிழக கடல் பகுதிகளில் இன்று முதல் மே மாதம் முடிய 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மீன் வளம் பெருகும் வகையில் வருடந்தோறும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ராமேஸ்வரம்மீன்துறை உதவி இயக்குநர் தங்கராஜ் தெரிவித்தார்.
இதனால் ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சென்னை, கடலூர் ஆகியபகுதிகளில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்த நடவடிக்கையால் வேலை இழக்கும் மீனவ குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு - பாண்டிச்சேரி மீனவ கூட்டமைப்பு செயலாளர் போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications