ரஜினியின் அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது: எஸ்.ஆர்.பி
சென்னை:
நடிகர் ரஜினி யாருக்கும் ஓட்டுப் போடச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. தனது கருத்தை மட்டுமே வெளிப்படுத்திஉள்ளார். எனவே அவரது அறிவிப்பினால் எந்தவித அரசியல் பாதிப்பும் ஏற்படாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்தகாங்கிரஸ் தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறினார்.
கடந்த 1996ம் ஆண்டு ப.சிதம்பரத்துடன் சேர்ந்து, ரஜினியை திமுக, தமாகா கூட்டணிக்கு ஆதரவாக திருப்பியதில் முக்கியப் பங்குவகித்தவர் எஸ்.ஆர்.பி எனப்படும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். ரஜினியுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ள தலைவர்களில்இவரும் ஒருவர்.
பாமகவுக்கு எதிராக ரஜினி மேற்கொண்டுள்ள நிலைப்பாடு குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ரஜினி தெவித்துள்ளகருத்து குறித்தும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறுகையில்,
ரஜினி தனது சொந்தக் கருத்தைத் தெவித்துள்ளார், அவ்வளவுதான். யாருக்கும் ஓட்டுப் போடும்படி அவர் சொல்லவில்லை.எனவே ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ரஜினிகாந்த்தின் அறிக்கையில் ரசிகர்களுக்கு மறைமுகமாக செய்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. அவரது கருத்துப்படிஅவர்கள் செயல்படுவார்கள். ஆனால் கடந்த 1996ம் ஆண்டைப் போல ரஜினி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஒட்டுமொத்தமாகஒரு அணிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்.
ரஜினி நல்ல மனிதர், ஆன்மீகவாதி, அமைதி விரும்பி. அவருக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் கிடையாது. அதனால்தான் இந்தமுறை கூட அவர் நேரடியாக அரசியலில் குதிக்கவில்லை.
1996ம் ஆண்டு திமுக-தமாகா கூட்டணியை ஆதரித்தார். 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டணியைஆதரித்தார். ஆனால், அதன் பின்னர் தன்னைத் தனிமையில் விட்டுவிடுமாறும், எதற்கும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும்கேட்டுக் கொண்டார்.
அதனால்தான் கடந்த 2 தேர்தல்களின்போதும் நாங்கள் ரஜினியை அணுகவில்லை என்றார் எஸ்.ஆர்.பி.
மூப்பனாருக்கு மிக நெருங்கியவராக விளங்கிய எஸ்.ஆர்.பி. இப்போது வாசனின் நிழலாக மாறியுள்ளார். நாடாளுமன்றத்தேர்தலில் தனது ஆதரவாளர்கள் பலருக்கும் சீட் வாங்கிக் கொடுத்த வாசனால், எஸ்.ஆர்.பிக்கு நீலகிரி தொகுதியை வாங்கித் தரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிரச்சாரத்தில் சுணக்கமாகவே இருந்து வருகிறார் எஸ்.ஆர்.பி.












Click it and Unblock the Notifications