நாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்த பெண்
விருதுநகர்:
செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்ததால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் முருகலட்சுமி. இவருக்கும் கணவர் தமிழ்வேலுக்கும்கல்யாணமாகி 12 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் ஒரு நாய்க் குட்டியை வாங்கி முருகலட்சுமிபிள்ளை போல கருதி வளர்த்து வந்தார்.
இந் நிலையில் முருகலட்சுமி வளர்த்து வந்த நாய்க் குட்டி கடந்த மாதம் இறந்து விட்டது. இதனால் முருகலட்சுமிமனம் உடைந்தார். சோகமாக இருந்து வந்தார். வெள்ளிக்கிழமை அவரது சோகம் முற்றியது. வீட்டில் யாரும்இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.
கருகிய நிலையில் உயிருக்குப் போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கும்,பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் அவரை கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் முருகலட்சுமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.