வரும் 24, 25ல் எம்.பி.பி.எஸ், பி.இ. நுழைவுத் தேர்வு: மே 20ம் தேதி ரிசல்ட்
சென்னை:
மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் இம் மாதம் 24,25ம் தேதிகளில் நடக்கின்றன. இந்தத் தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாகும் என்றுதெரிகிறது.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அண்ணாபல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு நடத்துகிறது. வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்குவரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். சமீபகாலமாக நாடு முழுவதும் பல நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகி பிரச்சனையைக்கிளப்பி வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சனையே இல்லை. கம்ப்யூட்டர்கள்உதவியால் 5 வகை வினாத்தாள்கள் தயாராகின்றன. வினாத்தாள் அச்சிடுவதும் ரகசியமாக நடக்கும்,அது தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதும் ரகசியமாகவே நடக்கும்.
அதே போல காப்பி அடிப்பதும் சாத்தியமில்லை. வினாத் தாள்களில் கேள்வி எண்கள், மாணவருக்குமாணவன் மாறும். இதற்கும் மேலாக பறக்கும் படைகளையும் அமைத்து தேர்வு தொடர்பானஅனைத்து விஷயங்களையும் கண்காணிப்போம்.
தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 20ம் தேதி வாக்கில் வெளியாகும் என்றார்.












Click it and Unblock the Notifications