கள்ள ஓட்டுப் போட்டால் கைது: சாரங்கி எச்சரிக்கை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட முயன்றால் உடனடியாக கைது செய்யப்பட்டு வழக்குத்தொடரப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி எச்சரித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச் செயலாளர்சையத் முனீர் ஹோதா, டிஜிபி கோவிந்த் மற்றும் தேர்தல் ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளுடன் சாரங்கி இன்று காலைஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கள்ள ஓட்டுப் போட முயன்றால் உடனடியாகஅவர்களை கைது செய்ய முடிடுெக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படுவோர் மீது உடனடியாக வழக்கும்தொடரப்படும்.
தமிழகத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளைக் கண்டறிந்து அங்கு மத்திய பாதுகாப்புப் படைகளை நிறுத்துவது குறித்துஅடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் தினகரன் வெளிநாட்டவர் என்ற புகார் குறித்து விசாரணை நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றார் சாரங்கி.












Click it and Unblock the Notifications