ஆண்டாளம்மா.. ஜெயலலிதா
சென்னை:
ஜெயலலிதாவை மலடி என்று வர்ணித்து, கருணாநிதி தனது வயிற்றெரிச்சலை அள்ளிக் கொட்டியிருப்பதாக பொதுப் பணித்துறைஅமைச்சரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெண்கள் மத்தியில் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா.
எங்கள் அம்மாவை, வராது வந்த மாமணியை, நம்மில் ஒருவராக வாழ்ந்து வரும் காவியத் தலைவியை, மலடி என்றும் பிள்ளைபெறாதவர் என்றும், இயற்கையாக கண்ணீர் விடத் தெரியாதவர் என்றும் கருணாநிதி விமர்சித்து, வயிற்றெரிச்சலை வாரிக்கொட்டியுள்ளார்.
நான் திருப்பி அடித்தால் யாரும் தாங்க முடியாது என்று, கைகளைத் தூக்கக் கூட முடியாத, தள்ளாத வயதில், இவர் கொக்கரிக்கிறார்என்றால், இவரது இறுமாப்பை என்னவென்று சொல்வது?
கலியுக ஆண்டாளாக வாழ்ந்து வரும் எங்கள் தலைவியைப் பற்றி ஒன்றும் தெரியாத கருணாநிதி இனியும் அப்படிப் பேசினால், மக்கள்அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார் ஓ.பி.












Click it and Unblock the Notifications