அதிமுக வன்முறைக்கு பதிலடி தர திமுகவினருக்கு கருணாநிதி உத்தரவு
திருச்சி:
தேர்தல் சமயத்தில் அதிமுகவினர் வன்றையில் ஈடுபட்டால் அதை திமுகவினர் அனுமதிக்கக் கூடாது என்று தொண்டர்களுக்குகருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் மதிமுக வேட்பாளர் எல்.கணேசனுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேசிய கருணாநிதி,
வெற்றி தங்களைவிட்டுச் செல்கிறது என்பதை அதிமுகவினர் புரிந்து கொண்டுவிட்டனர். இதனால் தேர்தல் நேரத்தில் வன்முறைச்செயல்கள் மூலம் வெற்றியைத் தட்டிப் பறிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதை திமுகவினர் அனுமதிக்கக் கூடாது. மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து அவர்களது திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற மக்களின் ஆர்வமும்எங்களுக்குப் புரிகிறது என்றார் கருணாநிதி.
கடந்த தேர்தல்களில் அதிமுகவினர் பெருமளவில் வன்முறையாட்டம் போட்டனர். இந் நிலையில் கருத்துக் கணிப்புகளும், தமிழகதேர்தல் சூழலும் அதிமுகவுக்கு எதிராக உள்ளதால் வாக்குப் பதிவன்று அக் கட்சியினர் வன்முறையில் இறங்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது.
இந் நிலையில் அதிமுகவினரின் வன்முறையை அனுமதிக் கூடாது என்று சொல்லி திமுகவினருக்கு கருணாநிதிஉத்தரவிட்டிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications