For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகை ஆற்றில் குளியல் தொட்டிகளுக்கு தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரை வைகை ஆற்றின் கரைப் பகுதியில் குளியல் தொட்டிகள் அமைப்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் விதித்துள்ளதடை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மணி என்பவர் உள்ளிட்ட 9 பேர் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், மதுரை வைகை ஆற்றங்கரையில் நாங்கள் குளியல் தொட்டிகள் வைத்துள்ளோம். இதற்கான உரிமம்முடிவடைந்ததையடுத்து அதைப் புதுப்பிக்க ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம்.

ஆனால் உரிமத்தைப் புதுப்பிக்க முடியாது எனவும், குளியல் தொட்டிகள் வைக்க அனுமதி இல்லை என்றும் ஆட்சித் தலைவர்எங்களது மனுவை நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால் இதில் எங்களதுமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஆற்றங்கரையோரமாக குளியல்தொட்டிகள் அமைப்பதால் ஆற்றில் தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. மேலும் தொழில் கூடமாக ஆற்றங்கரை மாறிவருகிறது. இதனால்தான் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் தினகர் மற்றும் முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரர்களின் புகார்களைநிராகரித்ததோடு, மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X