விளம்பரம் இல்லாத சுத்தமான சுவர்கள்; வித்தியாசமான கிராமம்!
கோவை:
கோவை மாவட்டம் நாதம்பாளையம் என்ற கிராமத்தில், சுவர்களில் தேர்தல் விளம்பரம் எழுதக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமத்தின் சுவர்கள் அனைத்தும் பளிச் என காணப்படுகின்றன.
அவிநாசி அருகே உள்ளது நாதம்பாளையம். விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த கிராமம் இது. இந்தக் கிராமத்தில்கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுவன்முறையில் முடிந்தது.
பலர் தாக்கப்பட்டனர். வீடுகளும் இடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இனிமேல் எந்தக் கட்சியினரும் இங்கு சுவர் விளம்பரங்களை எழுதக் கூடாது என தடை விதித்தது கிராமபஞ்சாயத்து.
அதை இப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக கடைப்பிடிக்கிறார்கள் இக் கிராம மக்கள்.
கிராமத்தில் உள்ள அனைத்து சுவர்களும் விளம்பரங்கள் இல்லாமல் படு சுத்தமாக காட்சி அளிக்கின்றன. சுவர் விளம்பரங்களைமட்டுமே இவர்கள் பகிஷ்காரம் செய்துள்ளனர். ஆனால் தேர்தல் நாளன்று தவறாமல் அனைவரும் வாக்களிப்போம் என்று கிராமமக்கள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications