ஜெவுடன் வாஜ்பாய் வேதனைக் கூட்டணி: கருணாநிதி
சென்னை:
வட சென்னை திமுக தொண்டர் தயாளின் இல்லத் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது:
தேர்தல் பணிக்கு இடையிலும் திமுக தொண்டரின் இந்தத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன். திருமணத்திற்கு முன் அலையன்ஸ் அமைஞ்சிருச்சா என்று ஆங்கிலத்தில் விசாரித்துக்கொள்வார்கள்.
நானும் தேர்தல் சுற்றுப் பயணத்தில் அலையன்ஸ் பற்றித் தான் பேசினேன். நம் கூட்டணி குறித்தும், இன்னொருகூட்டணி குறித்தும் பேசினேன். வெல்லப் போவது ஒரே அணி தான். அது நம் அணி என்பதைபிரச்சாரத்தின்போதே உணர்ந்து கொள்ள முடிந்தது.
மும்பையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் வாஜ்பாய், திமுகவை பாராட்டிப் பேசியிருக்கிறார். கூட்டணியைவிட்டு வெளியே போனாலும் திமுக ஒரு நல்ல கட்சி என்று வாஜ்பாய் பாராட்டி இருக்கிறார்.
ஆனால், இதே வாஜ்பாய் அவருடைய ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தபோது என்ன சொன்னார் தெரியுமா?அதிமுகவுடன் கூட்டணி இருந்த காலம் தான் தனது வாழ்க்கையிலேயே மிக வேதனையான காலம் என்றார்.
பாவம், இப்போது எவ்வளவு மனக் கஷ்டத்தோடு ஜெயலலிதாவுடன் அவர் கூட்டணியில் இருக்கிறார் என்பதைஇதைவிட வேறு சான்று காட்டி மெய்ப்பிக்க முடியாது என்றார் கருணாநிதி.