தனியார் இடங்களில் விளம்பர பலகைகள்: தேர்தல் ஆணையம் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் இடங்களில் அவர்களின் அனுமதியுடன் விளம்பரப் பலகைகள், பேனர்களை வைக்கலாம் என்று தேர்தல்ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள், பேனர்களை வைக்க விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்படுகிறது.
அதன் படி தனியாரின் அனுமதியுடன் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் விளம்பரப் பலகைகள்,பேனர்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இட உரிமையாளரை நிர்பந்தம் செய்து இவற்றை மேற்கொள்ளக்கூடாது.
விளம்பரப் பலகைகள், பேனர்கள் ஆகியவற்றிற்கான செலவை, வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்க்கவேண்டும் என்று சாரங்கி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications