ஸ்டிரைக் காலத்தை மனதில் வைத்து ஓட்டுப் போடுங்கள்: அரசு பணியாளர் சங்க தலைவர்
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில்தவறாமல் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இந்த சங்கத்தின் கூட்டம் தர்மபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட பின்னர் சங்கத்தின்தலைவர் கு.பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது குடும்பத்தோடு தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
கடந்த கால அனுபவங்களை (வேலைநிறுத்தம், அதைத் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்ஆகியவற்றை)மனதில் கொண்டு, வரும் தேர்தலில் தபால் ஓட்டுக்களை அரசு ஊழியர்கள் பதிவு செய்ய வேண்டும்என்றார் அவர்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரனும், கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டுஅரசு ஊழியர்கள் ஓட்டுப் போட வேண்டும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.