திருமண விவகாரம்: தாய் கொலை- மகள் தற்கொலைக்கு முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: -

தனக்கு 32 வயதாகியும் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகள் தாயைக் கொன்றுவிட்டு தானும்விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

சென்னை வில்லிவாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் பொன்னம்பலம்- கமலா (60) தம்பதின் மகள் சாந்தி (32).சாந்திக்கு இன்னும் திருமணமாகவில்லை. பொன்னம்பலம் தனது மனைவியைப் பிரிந்து தனியே வசித்துவருகிறார்.

தாயுடன் வசித்து வந்த சாந்தி, தனக்கு வயதாகிக் கொண்டே போகும் நிலையில் தனது திருமணத்துக்கு தயார் எந்தமுயற்சியும் செய்யவில்லை என்ற வேதனையில் இருந்து வந்தார். தனது வயதைக் குறிப்பிட்டு அக்கம் பக்கத்தினர்கேலி செய்ததால் தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந் நிலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 பூச்சி மருந்தையும்குளிர்பானத்தையும் வாங்கி வந்த சாந்தி, அதைக் குடித்து இருவரும் செத்துப் போகலாம் என்று கூறியுள்ளார்.

தாயாருக்கு பூச்சி மருந்து கலந்த குளிர்பானத்தைத் தந்துள்ளார். அதை கமலா குடிக்க மறுக்கவே, இருவருக்கும்தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தாயார் கமலாவை கீழே தள்ளியுள்ளார் சாந்தி. இதில் கமலாவுக்கு தலையில்பலத்த அடிபட்டு, மயக்கமானார். இதையடுத்து பூச்சி மருந்தை குடித்த சாந்தி மயங்கி விழுந்தார்.

சாந்தி வாயில் நுரை தள்ளியும், தாயார் மயங்கியும் கிடப்பதைக் கண்ட அப் பகுதியினர் பொதுமக்கள்வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனே போலீஸார் விரைந்து வந்து மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் சிகிச்சைக்காக சென்னைகீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர்.

கமலாவின் நிலை அபாயகரமாக இருந்ததால் பின்னர் அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து சாந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+