பூசாரிகள் இல்லாத திருமணங்கள் அதிகரிப்பு: கருணாநிதி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் சுய மரியாதைத் திருமணங்கள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் இல்லத் திருமணம் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதிகலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.

பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் இன்று பல திருமணங்கள் பூசாரிகள், ஹோமங்கள் இல்லாதுநடைபெறுகின்றன. இதுபோன்ற திருமணங்களை ஊக்குவிக்க பெரியாரும், அண்ணாவும், புரட்சிக்கவிபாரதிதாசனும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கவில்லை என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருமணங்களில் ஹோமங்களுக்குப் பதில், முக்கியஸ்தர்களின் பேச்சுக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்றுபெரியாரும், அண்ணாவும் விரும்பினார்கள். அது இன்றைக்கு நடந்து வருகிறது. அவர்கள் சொன்னது வீணாகிவிடவில்லை.

40ம் ஆண்டுகளின் காலகட்டத்தில் சுயமரியாதை இயக்க திருமணங்கள் குறித்து பிரசாரம் செய்யச் சென்றால்அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படும். எங்களை ஏசுவார்கள், அதுபோன்ற கூட்டத்திற்கு 50 பேர்தான் வருவார்கள்.அவர்களும் நாங்கள் பேசுவதை முழு மனதுடன் ஏற்காமல் திரும்பிச் செல்வார்கள். சில பேர் எங்களை சபிப்பார்கள்என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+