கோவை சிறையில் அல்-உம்மா கைதிகள் அடிதடி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டுவெடிப்புக் கைதிகளுக்கு இடையே இன்று அடிதடி நடந்தது. இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
98ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கைதிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறைக்குள் இவர்கள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறி ஷேக் பக்ருதீன் என்பவர் தலைமையில் 5 பேர் தங்களை விடுவிக்கக் கோரி தனியாக மனு செய்துள்ளனர். இதையடுத்து பாட்சா, அன்சாரி தரப்பினருக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.
இந் நிலையில் சிறையின் 10ம் பிளாக்கில் வாக்கிங் சென்ற இந்த இரு தரப்பையும் சேர்ந்த கைதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அடிதடி நடந்தது.
இதைத் தொடர்ந்து ஆயுதப் போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்த மோதலையடுத்து சிறையில் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளது.












Click it and Unblock the Notifications