For Daily Alerts
Just In
தேர்தல் பணியை புறக்கணித்த 3 அரசு பெண் ஊழியர்கள் சஸ்பெண்ட்
கரூர்:
தேர்தல் பணியில் ஈடுபடால் அதைப் புறக்கணித்த அரசு பெண் ஊழியர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கரூர் தொகுதியில் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்ட அரசு அலுவலர்களான உமா சங்கரி(அரவக்குறிச்சு கூட்டுறவு விரிவாக்க அலுவலர்), விஜயராணி (அரசுப் பள்ளி உடற்பயிற்சி உதவிஆசிரியை), லட்சுமி (தொடக்கக் கல்வித்துறை கண்காணிப்பாளர்) ஆகியோர் தங்களுக்குஒதுக்கப்பட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை.
இது தொடர்பான அரசின் உத்தரவைப் பெறாமல், விடுப்பில் சென்றுள்ளதன் மூலம் தேர்தல்பணியை புறக்கணித்துள்ளனர்.
இதனால் இவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தமூவரும் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, April 29, 2004, 5:30 [IST]