தனிக்கட்டையாக நிற்கும் திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை:
மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் பிரச்சாரம் எதிலும் பங்கேற்க முடியாமல் தனிமையில் வாடி வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவின் கடும் நிர்ப்பந்தம் காரணமாக புதுக்கோட்டை தொகுதி பாஜகவுக்கும்,திருநாவுக்கரசருக்கும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் மிகவும் அப்செட் ஆனார். அவரது ஆதரவாளர்களகொந்தளித்து உள்ளனர்.
இருப்பினும் கட்சிக் கட்டுப்பாட்டைக் காக்கவும், தேர்தல் நேரத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்புக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தனது கோபத்தை ஒதுக்கி விட்டு பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகபிரசாரம் செய்யத் தயார் என்று அறிவித்தார் திருநாவுக்கரசர்.
ஆனால் அதிமுகவினரோ இவரைக் கண்டு கொள்வதாக இல்லை. அது குறித்துக் கூட திருநாவுக்கரசருக்குகவலையில்லை. ஆனால், பா.ஜ.கவினரே அவரை பிரச்சாரத்துக்குக் கூப்பிடாமல் ஒதுக்குவது தான் அவரைஆத்திரத்தில் தள்ளியுள்ளது.
திருநாவுக்கரசர் பிரச்சாரத்துக்கு வந்தால் அந்தத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு வேலை செய்ய வேண்டாம்என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் திருநாவுக்கரசர் பெயரைச் சொன்னால்பா.ஜ.க. வேட்பாளர்கள் ஓடி ஒளிகின்றனர்.












Click it and Unblock the Notifications