பிரசாரத்தின் போது உயிரிழந்த காங். தொண்டர்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த 60 வயது காங்கிரஸ் தொண்டர் மாரடைப்பால் இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் நெலமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபு பக்கர். 60 வயதாகும் இவர் தீவிர காங்கிரஸ்தொண்டர். வியாழக்கிழமை காலை இவர் பார்த்திபனூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். திமுக வேட்பாளர்பவானி ராஜேந்திரனுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள்,கூட்டணிக் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications