சிபிஐ பிடியில் 12 சென்னை வருமான வரி அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்னையை சேர்ந்த 12 வருமான வரித்துறை அதிகாரிகள் சிபிஐ பிடியில் சிக்கியுள்ளனர்.

மதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனிடம் உதவியாளராகஇருந்த பெருமாள்சாமி, வருமான வரித்துறை அதிகாரிகளின் இடமாற்றல் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாக கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

பெருமாள்சாமியின் நண்பரான சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் சி.பி.ஐ.அதிகாரிகள் சோதனை நடத்தியபோது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் அவருக்கும் இடையே இருந்துவந்த சட்டவிரோதமான கூட்டணி தெரியவந்தது.

இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் பலருக்கும் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி ஏகப்பட்ட செலவு செய்தவிவரமும், அதற்கு கைமாறாக ஆடிட்டரின் கிளையன்டுகளிக்கு அதிகாரிகள் வரி விலக்குகள் தந்ததும்தெரியவந்தது.

கிருஷ்ணமூர்த்தியின் உதவியால் பல தொழிலதிபர்கள் ரூ.30 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சென்னையைச் சேர்ந்த 12 வருமான வரித்துறை அதிகாரிகளும் உடந்தையாகஇருந்துள்ளனர்.

இந்த 12 அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்யவும், துறை சார்ந்த நடவடிக்கைஎடுக்கவும் மத்திய நிதித்துறைக்கு சி.பி.ஐ. இயக்குனரகம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 102 வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.பரிந்துரைத்துள்ளது. இந்த 102 பேரும் வட இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளாவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+