அதிமுகவில் இணைந்தார் முன்னாள் திமுக அமைச்சர் ஜெனீபர் சந்திரன்
திருச்செந்தூர்:
திமுக முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திருச்செந்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாகவும், திமுக அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர்ஜெனீபர் சந்திரன். இவர் திருச்செந்தூரில் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது அவர் முன்னிலையில் அதிமுகவில்இணைந்தார்.
அதேபோல, திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், ஜெயலலிதாமுன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திமுகவில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரிந்து சென்றபோது அவருடன் சென்றவர்ராதாகிருஷ்ணன். பின்னர் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் கருணாநிதி, மறைந்தமத்திய அமைச்சர் முரசொலி மாறன், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோரின் நம்பிக்கைக்குப்பாத்திரமானவர்.
ஆனால் சமீபத்தில் வைகோ மீண்டும் திமுகவுடன் நட்பைப் புதுப்பித்தவுடன், ராதாகிருஷ்ணனுக்கு திமுகவில்முக்கியத்துவம் குறைந்தது. இதனால் அவர் திமுகவிலிருந்து விலகியுள்ளார். மேலும், கருணாநிதி, ஸ்டாலின் குறித்தபுத்தகத்தையும் அவர் விரைவில் வெளியிடப் போவதாக கூறப்படுகிறது.
தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு:
இதற்கிடையே, விவசாயிகளுக்கான ரூ. 400 கோடி கடன் தொகையை ரத்து செய்ததற்காக அதிமுகவுக்கு இந்ததேர்தலில் விவசாயிகள் ஆதரவு கொடுப்பார்கள் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
சங்கத்தின் தலைவர் எம்.சிவசாமி இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே கடந்தசட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவுக்கே நாங்கள் ஆதரவு தந்தோம். அப்போது விவசாயிகளின் குறைகளைதீர்ப்போம் என்று அதிமுக அரசு கூறியது. அதை இப்போது நிறைவேற்றியுள்ளது. எனவே விவசாயிகளின் ஆதரவுஅதிமுகவுக்கே என்றார்.












Click it and Unblock the Notifications