புதிய தலைமை செயலகம் காரணமாக இடம் பெயரும் அண்ணா பல்கலை. கல்வி நிறுவனங்கள்
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தடையாக இருந்த வழக்குகளில் தமிழக அரசுக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களைவேறு இடங்களுக்கு மாற்றும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்துசென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசுக்குச் சாதகமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.கட்டுமானப் பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளகல்வி நிறுவனங்களை இடம் மாற்றும் பணி தொடங்கவுள்ளது.
வருகிற 15ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் இந்த கல்வி நிறுவனங்களை இடம் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு கடந்த வாரம் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் தலைமையில் நடந்த அதிகாரிகள்மட்டத்திலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து 25ம் தேதிக்கு மேல் முழு வீச்சில் புதிய தலைமைச் செயலகத்திற்கான பணிகள் தொடங்கும் என்றுதெரிகிறது.