ஈரோடு கோவிலில் 3008 ஆடுகளை பலி கொடுத்து விழா!
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள பூனாச்சி கிராமத்தில் நடந்த கோவில் விழாவில் 3008ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.
வெள்ளித்திருப்பூர் அருகே உள்ளது பூனாச்சி கிராமம். இங்கு சென்னகேசவர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில்ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் ஆடு பலி கொடுத்து விழா நடத்தப்படும்.
ஆடு, கோழி பலிக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு தடை விதித்திருந்ததால், கடந்த ஆண்டு ஆடு பலிநடக்கவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த தடை சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா சென்னகேசவர் கோவிலில் சிறப்பாக நடந்து வருகிறது. முக்கியநிகழ்ச்சியான ஆடு பலி கொடுப்பது இன்று நடந்தது. மொத்தம் 3008 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந் நிகழ்ச்சியை பார்த்தனர்.
கடந்த வருடத்தைப் போல அல்லாது இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி விழா நடந்து வருவதாக பூனாச்சி கிராமமக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications