வேலை தேடி வெளிநாடு செல்வோருக்கு அரசு அறிவுரை
சென்னை:
வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றுதமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவிலும், மலேசியாவிலும் செயல்படும் சில முகவரமைப்புகள் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துசுற்றுலா விசாவில் ஏராளமான தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அவர்களுடைய விசா காலக் கெடு முடிவடைந்த பிறகு அவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பது சட்ட விரோதமாகிவிடுவதால், அங்குள்ள காவல் நிலையங்கள் மூலமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
எனவே வேலை தேடி மலேசியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் செல்ல விரும்பும் தொழிலாளர்கள் தங்கள்வேலைவாய்ப்பு பற்றி முறையாக விசாரித்து அறிந்து கொள்வதோடு போதுமான முன்எச்சரிக்கைநடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்துகிறது.
இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வளாகம், அசோக்நகர்,சென்னை- - 83 என்ற முகவரியில் உள்ள மத்திய அரசு, தொழிலாளர் நல அமைச்சகத்தின் குடிபெயர்வுஅலுவலகத்தை அணுகலாம். இந்த அலுவலகத்தை 24891337 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுதேவையான ஆலோசனைகளை பெறலாம்.
மேலும் 41, மெக்நிக்கல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை- - 31 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு அரசுநிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தையும் (தொலைபேசி எண்: 28365099) அணுகிதேவையான விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.