ராமநாதபுரம்: ரூ.1.1 கோடி ஹெராயின் பறிமுதல்; 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே 1.1 கிலோ ஹெராயினை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று பறிமுதல்செய்தனர்.
ராமநாதபுரம் திருப்புள்ளானி என்ற இடத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு நபர்கள் மோட்டார்பைக்கில் வந்தனர்.
அவர்களை போலீஸார் சோதனை செய்தபோது, அவர்களிடம் 1.1 கிலோவுக்கு ஹெராயின் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1.1 கோடி ஆகும். மும்பை தாராவியில்இருந்து இந்த போதைப் பொருளை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இப்போது அவர்கள் இருவரும்நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications