For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருமகன் கொலை வழக்கில் காங்கேயம் அதிமுக பெண் எம்.எல்.ஏக்கு முன்ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

மருமகன் கொலை வழக்கில் காங்கேயம் அதிமுக எம்.எல்.ஏ. செல்வி முருகேசன், அவரது கணவர் முருகேசன்ஆகியோருக்கு பெங்களூர் மாவட்ட 2வது கூடுதல் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

செல்வி முருகேசனின் மகள் கவிதாவும். இவரது வீட்டு அருகே வசிக்கும் சிவக்குமாரும் பெற்றோரின் எதிர்ப்பைமீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின் சிவக்குமாருக்கு மிரட்டல் வந்ததால் இருவரும் பெங்களூர் கோரமங்களாவில் தங்கியிருந்து,அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.

இந் நிலையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக செல்வி முருகேசன், அவரது கணவர் முருகேசன் உள்பட சிலரை பெங்களூர் போலீஸார் தேடிவந்தனர். இதையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இந் நிலையில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர். இவர்களது ஜாமீன் மனுவை விசாரித்த மாவட்ட 2-வது கூடுதல் நீதிபதி, செல்வி முருகேசன் மற்றும்முருகேசனுக்கு சில நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X