For Daily Alerts
Just In
வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்துக்கு மழை?
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 2 நாள் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை கத்திரி வெயில் கொளுத்துகிறது. இந் நிலையில் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதாகசென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
வங்க கடலின் தென் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அது மேலும் வலுவடைந்துபுயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், புதுவை கடலோர பகுதியில் மழையோ அல்லதுஇடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்யலாம் என்றுகூறப்பட்டுள்ளது.
மழை பெய்தால், கோடை வெயில் காரணமாக கஷ்டப்படும் மக்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, May 1, 2004, 5:30 [IST]