For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக, பா.ஜ.கவின் விஷமப் பிரசாரம்: வாசன் சாடல்

By Staff
Google Oneindia Tamil News

தென்காசி:

அதிமுகவும், பா.ஜ.கவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறாகவும், விஷமத்தனமாகவும்பிரசாரம் செய்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அப்பாதுரைக்குஆதரவாக வாசன் ஆலங்குளம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு சாதனையும் பிரதமர் வாஜ்பாயிடமும், முதல்வர் ஜெயலலிதாவிடமும் இல்லை.

இதனால்தான் சோனியா காந்தி குறித்து விஷமப் பிரசாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதைஅவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வளர்ச்சி, முன்னேற்றத்தில் இந்தியாவிலேயே கடைசி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ஜெயலலிதாவின்ஆட்சியே இதற்குக் காரணம். இந்தியாவிலேயே மோசமான முதல்வர் என்ற பெயரை அவர் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

தினசரி 20 மணி நேரம் உழைப்பதாக அடிக்கடி ஜெயலலிதா கூறிக் கொள்கிறார். ஆனால் அப்படி உழைத்தும்தமிழகத்தை முன்னேற்ற முடியவில்லை. யாருடைய முன்னேற்றத்திற்காக அவர் கடுமையாக உழைக்கிறார் என்றுதெரியவில்லை.

மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது. இது காலத்தின் கட்டாயம். அதேபோல, தமிழகத்திலும் அரசியல்மாற்றம், ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என்றார் வாசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X