அதிமுகவில் சேர்ந்தது ஏன்? ஜெனிபர் சந்திரன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்:

அதிமுகவில் சேர்ந்தது ஏன் என்பதற்கு முன்னாள் திமுக அமைச்சர் ஜெனிபர் சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், முன்னாள் திமுக மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்ஆகியோர் திமுகவை விட்டு விலகி திருச்செந்தூரில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.

இந் நிலையில் ஜெனிபர் சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

திமுகவில் நான் அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தபோது திருச்செந்தூர் தொகுதி மக்களுக்காகசிறப்பாக பணியாற்றி வந்துள்ளேன். இருப்பினும் திமுகவில் எனக்கு முறையாக மரியாதை தரப்படவில்லை.

எனக்கு கட்சியில் ஏற்பட்ட அவமானங்களை நான் ரொம்ப காலம் பொறுத்து கொண்டு இருந்தேன்.

திமுகவில் சிரமப்பட்டு உழைத்தாலும் மரியாதை இருக்காது.சில நபர்களால் நல்ல பெயர் கிடைக்காது.அதனால்தான் கட்சியை விட்டு விலக நேர்ந்தது. திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக வெற்றிக்கு கடுமையாகஉழைப்பேன் என்று கூறினார்.

ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடவடிக்கை பிடிக்காமல் எங்களை போன்றவர்கள் திமுகவுக்குசென்றோம். இப்போது வைகோவை திமுக தலைவர் கருணாநிதி அரவணைத்ததால் நாங்கள் பகடைக்காய்ஆனோம்.

இந் நிலையில் தமிழகத்தில் பயங்கரவாதம் கூடாது என்றும், காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்என்றும், கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக ஜெயலலிதா பாடுபட்டுவருகிறார்கள்.

மேலும் திமுகவில் உழைப்பவர்களுக்கு வாய்ப்பு இல்லை. வெறுப்பின் அடிப்படையில் கட்சியை விட்டு வெளியேவரவில்லை. கொள்கை அடிப்படையில் தான் வெளியே வந்தேன் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+