உறுதியானது வாஜ்பாயின் கோவை பிரசாரம்
சென்னை:
பிரதமர் வாஜ்பாயின் கோவை பிரசாரத்தை தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் எச். ராஜா உறுதி செய்தார்.
அதிமுக, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழகத்தில் நாளுக்கு நாள் செல்வாக்கு படு மோசமாக சரிந்து கொண்டிருப்பதால்சென்னையில் மட்டுமின்றி, கோவை, நீலகிரி தொகுதிகளிலும் பிரதமர் வாஜ்பாயின் பிரசாரத்திற்கு பா.ஜ.க முயற்சிமேற்கொண்டிருந்தது.
இந் நிலையில், ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் வாஜ்பாயின் கோவை பிரசாரத்தை உறுதி செய்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கோவையில் வரும் 5ம் தேதி மாலை 4.30 மணிக்கு பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்துவாஜ்பாய் பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவுடன் சென்னையில் நடைபெறும்பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
துணைப் பிரதமர் அத்வானி 7-ம் தேதி மாலை 6 மணிக்கு சிதம்பரம் தொகுதி விருதாச்சலத்தில் நடைபெறும்பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அன்றிரவு 9 மணிக்கு பாண்டிச்சேரியில் பிரசாரம் செய்கிறார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 7-ம் தேதி காலை நீலகிரி தொகுதியிலும், மாலையில் தர்மபுரி தொகுதியிலும்பிரசாரம் செய்கிறார். மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை 5 மணிக்கு சிதம்பரம் தொகுதிநெய்வேலியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி 7ம் தேதி நாகர்கோவில் தொகுதியில் பிரசாரம் செய்கிறார் என்றுகூறினார்.