பதற்றமான தொகுதிகளில் விடியோ காமிரா கண்காணிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பதற்றம் நிறைந்த தொகுதிகள் வாக்குப் பதிவின் போது விடியோ காமிராக்களின் மூலம்கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையர்கள் டாண்டன், கோபாலசுவாமி ஆகியோர் அளித்த பேட்டியில்கூறியதாவது:

தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது வன்முறை நிகழலாம் என்று அரசியல் கட்சிகள் அச்சம் தெரிவித்தன. அப்புகார்களைப் பரிசீலித்தோம். அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க,

பதற்றம் நிறைந்த தொகுதிகள் அனைத்திலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படுவார்கள்.

நாங்கள் பயப்படவில்லை. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கையூட்டும் வகையில் துணைராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்படும்.

தென் சென்னை திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தமது வேட்பு மனுவுடன் அளித்த பிரமாணப் பத்திரத்தில் தமக்கு 2மனைவிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அவர் இதைச் சொல்லாமல் இருந்திருந்தால்தான் விதிமீறல் ஆகும்.

தமிழகத்திலிருந்து 39 புகார்கள் வந்தன. 33-ன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. எஞ்சிய புகார்கள் குறித்து2 அல்லது 3 நாள்களுக்குள் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்பாளர்களிடமிருந்து திமுக அதிகப் பணம் வசூலித்ததாக அதிமுக கூறியப் புகாருக்கு ஆதாரம் தரவில்லை.

அதிக வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக பெரியகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆரூணுக்குத்தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க முடியாது. தேர்தல் விதிகளில் அப்படி ஏதும் கூறப்படவில்லை.

மகளிர் சுய உதவிக் குழுக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக வந்த புகார் நிரூபிக்கப்படவில்லை.

புதுவையில் கட்சி விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக மீண்டும் பலகைகள் வைத்ததுதொடர்பாக, அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+