சந்திரிகா - நார்வே தூதுக்குழு சந்திப்பு
கொழும்பு:
விடுதலைப்புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்து நார்வே தூதுக்குழுவினர் இன்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தினர்.
கடந்த வாரம் நார்வே பிரதமர் கேஜெல் மாங்னி பாண்டிவிக்குடன் சந்திரிகா தொலைபேசியில்தொடர்பு கொண்டு, அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து நார்வே வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விதார் ஹெல்கேசன் தலைமையில்நார்வே தூதுக் குழு கொழும்பு வந்தனர். நேற்று இலங்கைப் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயைஹெல்கேசன் சந்தித்துப் பேசினார்.
நுவாரா எலியா என்ற மலைவாசஸ்தலத்தில் சந்திரிகா தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.இன்று ஹெல்கேசன் மற்றும் நார்வே தூதர் எரிக் சோல்ஹைம் ஆகியோர் அங்கு சென்றுசந்திரிகாவைச் சந்தித்தனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்,ஹெல்கேசன் இன்று இந்தோனேஷியா கிளம்பிச் செல்கிறார். எரிக் சோல்ஹைம் நாளை கிளிநொச்சிசென்று விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்துவிவாதிக்கிறார். அவர் புதன்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications