திடீர் கன மழையில் திணறும் தமிழகம்!
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இந்த பெய்கிறது.
கடும் வெயில் வீசும் அக்னி நட்சத்திர காலம் இன்று முதல் (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதனால் அடுத்த 25 நாட்களுக்குகத்திரி வெயில் வீசும். வருடந்தோறும் சித்திரை 21ம் தேதி முதல் (இன்று முதல்) வைகாசி 15ம் தேதி வரை (மே 28ம் தேதி வரை)அக்னி நட்சத்திர காலம் என்று அழைக்கப்படுகிறது. இக் கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக, மிக அதிகமாக இருக்கும்.
இன்று முதல் அக்னி நட்சத்திர காலம் தொடங்கினாலும், வங்கக் கடலின் தென் மத்தியப் பகுதியில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் காரணமாக தமிழகத்தில் வெப்பம் குறைந்து, கன மழை பெய்து வருகிறது.
இந்த புயல் சின்னம் இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனசென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்றிரவு விடிய விடியப் பெய்த மழை இன்றும் தொடர்கிறது. இதனால் சென்னை நகரில் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி புதிதாக போடப்பட்ட பல சாலைகள் சேதமடைந்து பல்லைக் காட்டத் தொடங்கியுள்ளன. பல பகுதிகளில்தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் சாலையோர மரங்கள் விழுந்து கிடக்கின்றன.
இதேபோல, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோவை, நாகை, ராமநாதபுரம் என தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்றுமுதல் கன மழை பெய்து வருகிறது.
காரைக்காலில் 100 மி.மீ, நாகப்பட்டினத்தில் 100 மி.மீ, தொண்டி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 20 மி.மீ எனமழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
இந் நிலையில், தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய பலத்த மழையோபெய்யக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.