இன்று நள்ளிரவில் சந்திர கிரகணம்
சென்னை:
இன்று நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தகிரகணத்தைக் காண முடியும்.
சென்னையில் சந்திர கிரகணத்தைப் பொதுமக்கள் காண்பதற்கு அறிவியல் தொழில் நுட்ப மையம் ஏற்பாடுசெய்துள்ளது.
இந்தக் கிரகணம் நள்ளிரவு 1:32க்கு ஆரம்பிக்கிறது. இந்தியா, ஆப்ரிக்காவின் பல பகுதிகள், மத்திய கிழக்குஆசியா, கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் முழு அளவிலும், தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா,ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் குறைவான அளவிலும் இந்த சந்திர கிரகணத்தைக் காணலாம். வடஅமெரிக்காவில் இந்த சந்திர கிரகணத்தைக் காண முடியாது.
சந்திர கிரகணத்தைப் பொதுமக்கள் காண்பதற்கு சென்னை அறிவியல் தொழில் நுட்ப மையம் ஏற்பாடுசெய்துள்ளது. இது குறித்து மையத்தின் தலைவர் எஸ். ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சென்னை அடையாறு இந்திரா நகரிலுள்ள 2-வது அவென்யூவில், இந்திரா நகர் குடிநீர் டேங்க் அருகில்அமைந்துள்ள இளைஞர் விடுதியில் சந்திர கிரகணத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று இரவு 11.30 மணிக்குத் தொடங்கி நாளை அதிகாலை 3.30 வரை கிரகணத்தைக் காணலாம். இங்குவருவோர் வானியல் துறை வல்லுநர்களுடன் கலந்து உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்குபெற விரும்புவோர் மைலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ஆஞ்சேனயர் கோயில் வளாகத்தில் உள்ள மேக்ரோமார்க்கெட்டிங் நிறுவனத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு வருட காலத்துக்குள் ஏற்படும் மூன்றாவது சந்திர கிரகணம் இது. கடந்த ஆண்டு மே 15, 16 மற்றும் நவம்பர் 8ம்தேதிகளிலும் சந்திர கிரகணம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications