என்னை நம்புங்கள் வாஜ்பாயை நம்புங்கள்: ஜெ
சென்னை:
என்னை நம்பினால் சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் பாலகங்காவை ஆதரித்து சென்னையில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:
தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு செவி சாய்க்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும். அதற்கு வாஜ்பாய் பிரதமராகவேண்டும். சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன்.
அதில் புதிய வீராணம் திட்டமும் ஒன்று. இந்த திட்டம் சாத்தியம் நிறைவேற சாத்தியமில்லை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறுகிறார். அவர் கூறுவது உண்மை என்றால் உலக வங்கி ரூ. 1,638 கோடி கடன் வழங்கியிருக்குமா?
சென்னை மாநகர குடிநீர் பிரச்சினை தீர்க்க திமுக எதுவும் செய்யவில்லை. அவர்கள் எதையும் செய்யமாட்டார்கள்.அதை செய்ய நான் முன் வந்தால் அவர்களால் பொருத்துக் கொள்ள முடியாது.
எதை செய்ய முடியுமோ அதைத் தான் நான் சொல்வேன். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவதாக வாஜ்பாய்கூறியிருக்கிறார். என்னை நம்புங்கள்; வாஜ்பாயை நம்புங்கள்.
மீண்டும் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தால் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து சென்னை மாநகரகுடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்போம் என்று பேசினார்.
இன்று வெங்கைய்யா..நாளை அத்வானி
அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்று வடசென்னை தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
இத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுகுமாரன் நம்பியாரை ஆதரித்து வில்லிவாக்கம், திருவொற்றியூர், ஆர்.கே. நகர் பகுதிகளில்அவர் பிரசாரம் செய்கிறார்.
அதே போல அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் இன்று வட சென்னையிலும் நாளை சிதம்பரம், புதுவைத் தொகுதிகளிலும்பிரச்சாரம் செய்கிறார்.
அத்வானி வருகை:
இந் நிலையில் துணைப் பிரதமர் அத்வானி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை தமிழகம் வருகிறார். விருத்தாசலத்தில் நடைபெறும்தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
முதலில் எல்.கே. அத்வானி இன்று ஊட்டியில் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்தமழையின் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஊட்டி பிரச்சாரம்ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதனால் நாளை பகல் 12 மணிக்கு அவர் விருத்தாசலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு பேசும்அத்வானி, பின்னர் புதுவைக்குச் சென்று பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்துக்கு பிரசாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications