தோல்வி பயத்தில் பா.ஜ.க-அதிமுக: சொல்கிறது காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தோல்வி பயம் காரணமாகவே பா.ஜ.க.- அதிமுக கூட்டணியினர் ஜெயின் கமிஷன் அறிக்கை குறித்து பேசுவதாகஅகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான கமல்நாத் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வருகையையொட்டி சென்னை வந்த கமல்நாத் விமான நிலையத்தில்நிருபர்களிடம் கூறியதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயின் கமிஷன் தனது இறுதிஅறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளது.

அண்மையில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குறைந்தபட்சபெரும்பான்மை கூட கிடைக்காது என்று கூறியுள்ளன. எனவே, தோல்வி பயத்தின் காரணமாகவே பா.ஜ.க மற்றும்அதிமுகவினர் ஜெயின் கமிஷன் விவகாரத்தை கிளறுகிறார்கள்.

அதன் இறுதி அறிக்கையில் திமுகவுக்கும் கொலைக்கும் சம்பந்தமே இல்லை என்று தெளிவாகவிளக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது முடிந்து போன ஒன்றாகும். தேர்தல் முடிவுக்குப் பின் புதிய அரசுஅமையும். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெறும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+