மதுரை மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மசூதியில் சந்தனக் கூடு விழா மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில்நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ள நிலையில் மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்வந்தது.
மசூதிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்றும் தொலைபேசியில்பேசியவர் கூறினார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்த போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால்மசூதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து மசூதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications