வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்குத் தேவைப்படும் மின்னணு இயந்திரங்களை அனுப்பும் பணிதமிழகத்தில் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் வரும் 10ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. இன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி இன்று காலை தொடங்கியது.
சென்னையில் உதவி தேர்தல் அதிகாரி ராமகிருஷ்ணன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டன.பின்னர் அவர்களது சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு அதன் பின்னர் சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகள்அமைந்துள்ள பகுதிகளுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டன.
இதுதவிர அடையாள மை உள்ளிட்ட பொருட்களும் இன்றே அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்படும். 9ம் தேதி காலை இவை அனைத்தும்வாக்குச் சாவடிகளில் வைக்கப்படும் என்றார்.
அதே போல தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்குப் பதிவுஎந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. வாக்குச் சாவடிகளின் அருகே உள்ள பள்ளிகள்,அரசு அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இவை வைக்கப்பட்டிருக்கும்.












Click it and Unblock the Notifications