பீதி ஏற்படுத்திய சூட்கேஸ்!
சென்னை:
சோனியா காந்தி வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேஸால் பெரும் பீதி ஏற்பட்டது.
நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை வந்தார். அவரது வருகையையொட்டி சென்னைவிமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் விமான நிலைய பயணிகள் சோதனைப் பகுதியில் ஒரு கருப்பு நிற சூட்கேஸ் அநாதையாகக்கிடந்தது. இதனால் பாதுகாப்புப் படையினர் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அந்த சூட்கேஸை உடனடியாக அங்கிருந்து அகற்றிய அதிகாரிகள் அதை குளிர்சாதன அறையில் வைத்தனர்.
சோனியா விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வரை ஒரே பரபரப்பாக இருந்தனர் அதிகாரிகள்.
பின்னர் அதை தங்கள் கஸ்டடியில் எடுத்த மத்திய உளவுப் பிரிவினர் விமான நிலையத்தின் வெளிப் பகுதிக்குஅந்த சூட்கேஸை எடுத்துச் சென்றனர். அது யாருடைய சூட்கேஸ், அதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications