மேலும் 2 போலீஸ் அதிகாரிகளை இடம் மாற்றிய தேர்தல் ஆணையம்
சென்னை:
சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 2 உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடம் மாற்றியுள்ளது.ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால் இவர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அதிகாரிகள் மீது அதிக அளவில் விதி மீறல் புகார்கள் வருவதேஇதற்குக் காரணம்.
இந் நிலையில், சென்னை மாநகர துணை ஆணையராக இருந்து வந்த சண்முக ராஜேஸ்வரன், உதவி ஆணையர்முருகேசன் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சண்முக ராஜேஸ்வரனுக்குப் பதில் கருணாசாகர் என்பவர் அவரது பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னைநகரில் ஜெயலலிதா பிரசாரக் கூட்டங்களில் அதிக அளவில் விதி மீறல்கள் நடந்தும், அதைக் கண்டுகொள்ளாததால் இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரை காவல்துறை ஆணையர் விஜயக்குமார், சென்னை ஆட்சித் தலைவர் கண்ணுச்சாமி, திருவள்ளூர்ஆட்சித் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications